8-8-08

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக இன்று ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com

பாரதிதாசனும் எரிபொருள் விலையும்



உலகத்தையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கும் எரிபொருளுக்கும் உலக அளவிலான இராணுவங்களுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. இது சிலருக்கு மட்டும் தெரியும். பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
உலக மக்களை இப்படிப் பாடாய்ப்படுத்துகிற எரிபொருளுக்கும் இராணுவங்களுக்கும் இரத்த உறவு உண்டு என்பது அண்மையில் தான் தெரிய வந்தது.

இதை நான் விளக்குவதற்கு முன்பு எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.

அமேரிக்காவில் ‘பென்சில்வேனியா’ என்று ஒரு மாநிலம். அதிலே, ‘கிடுஸ்விலே’ என்ற ஓர் ஊர். அந்த ஊரை சேர்ந்தவர் ட்வின் பிரேக். ஒரு நாள் கிணறு வெட்டினார். அந்தக் கிணற்றை அவர் எதற்கு வெட்டினார். மனிதனுக்கு வேண்டிய குடி நீருக்கா? அல்லது வாகனங்களின் குடிநீரான எரிபொருளுக்கா?

கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது எனும் பழமொழி கர்னல் எட்வின் பிரேக்கைப் பொறுத்த வரைக்கும் நூற்றுக்கு நூறு உண்மையாகிவிட்டது. அவர் அன்று வெட்டிய கிணற்றிலிருந்து வந்தது குடிநீரல்ல, அலாவுதீன் பூதம்... அது தான் பெட்ரோல்.

ஆனாலும் அன்றய நிலையில் எரிபொருளின் மதிப்பு யாருக்கும் தெரியாததால் எட்வின் பிரேக்கை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. அன்றைய தேவை மண்ணெண்ணய் தான். அதைக் குறி வைத்துதான் எட்வின் கிணறு வெட்டி இருக்கிறார்.

20 ஆம் நூற்றாண்டு வரைக்கும் மண்ணேண்ணையோடு உபரி பொருளாகவே பெட்ரோல் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தாமஸ் அல்வா எடிசன் எனும் புண்ணியவான் மின்சாரத்தை கண்டுபிடித்த பிறகு மண்ணெண்ணய், பெட்ரோல் முதலியவற்றுக்குறிய மதிப்பு சரிந்துவிட்டது.

அவரவர் வீட்டுவிளக்கை ஏற்றுவதற்கு ‘எரிபொருள் பொன்’ தேவைபடவில்லை. பொன்மகளாய் தொன்றிய மின்மகள் வீட்டுக்கு விளக்கேற்ற வந்துவிட்டாள்.

1880 களில் மின்சார உற்பத்தி இயந்திரம் எடிசனால் அறிமுகப்படுத்தப்பட்ட போது எரிபொருளுக்கு இருந்த மதிப்பு காலில் மிதிப்பட்ட பூப்போல ஆகிவிட்டது.

ஆனால் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இதற்கு முன்பதாக 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எரிபொருளில் இயங்கும் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டதும் எரி பொருளுக்கு முக்கியதுவம் அதிகரித்தது.

குறிப்பாக முதலாவது உலகப் போரில்தான் எரிபொருள் தேவை தனிச்சிறப்பு வாய்ந்ததாகிவிட்டது. போர்க்காலத்தில் தளவாடங்கள். உணவு பொருட்கள் முதலியவற்றை ஓர் இடத்தில் இருந்து மற்றும் ஓர் இடத்திற்கு வாகனத்தின் வழிக் கொண்டு சொல்ல எரிபொருள் தேவைப்பட்டது.

முதலாவது உலகப் போர் மட்டும் வராமல் இருந்திருந்தால் எரிபொருளின் தேவை முக்கியதுவம் பெற்றிருக்குமா என்பது கேள்விக்குறிதான். போதாதற்கு 1941-1945 வரை நடந்த இரண்டாவது உலகப் போர் எரிபொருளின் பெருமளவுத் தேவைக்கு அடித்தளமிட்டுவிட்டது.

இதுவரை கூறியவை அனைத்தும் பழைய கதை. இன்றய எரிபொருள் விலையேற்றத்திற்கு வருவோம்.

இன்று 133 டாலராக இருக்கும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 1970 ஆம் ஆண்டு வெறும் 1.80 அமேரிக்க டாலர். இந்த விலையையும் உலகத்திலேயே எரிபொருள் உற்பத்தியில் முதன்மை நாடாக விளங்கும் சவுதி அரேபியாதன் நிர்ணயித்தது.

1974ஆம் ஆண்டு 10 டாலராக கிட்டதட்ட 80% உயர்ந்துவிட்டது. இதற்கு காரணம் என்ன? எல்லாம் இந்தப் பாழாய் போனா போர்தான். 1973ல் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் ஏற்பட்ட போரினால் இந்த விலையேற்றம் கண்டது.

பிறகு 1979 ஆம் ஆண்டு 10 டாலரில் இருந்து 20 டாலராக உயர்ந்தது. இதற்கு காரணம் ஈரானில் மூண்டேழுந்த இஸ்லாமியப் புரட்சியாகும்.
அப்படியும் இப்படியுமாக 1980 ல் 30 டாலராக இருந்த விலை 1981 தொடக்கத்தில் 39 டாலராக அதிகரித்தது. இதற்கு காரணம் ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையே மூண்ட போர்.

அதற்கு பிறகு 1990 செப்டம்பர் முதல் அக்டேபர் வரை குவைத் நாட்டின் மீது ஈராக் நடத்திய படையெடுப்பால் 40 டாலருக்கு மேல் உயர்ந்துவிட்டது.
2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட கத்தரினா எனப்படும் சூறாவளி காரணமாக ஒரு பப்பாய் கச்சா எண்ணை விலை திடீரென 70 டாலராக உயர்ந்துவிட்டது. மெக்ஸிக்கேவில் இருக்கும் எண்ணெய் உற்பத்தி நிலையம் சூரவளியில் நாசமடைந்ததை தொடர்ந்து இந்த விலையேற்றம் ஏற்பட்டது.

இந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி 100 டாலராக அதிகரித்துவிட்டது. இதற்குக் காரணம் நைஜீரியாவில் ஏற்பட்டக் கலவரம், பாகிஸ்தான் நிலவரம் மற்றும் அமேரிக்க எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட விநியோகப் பிரச்சனை முதலியன.

இந்த ஆண்டில் மார்ச் 13 ஆம் தேதி யாரும் எதிர்பாராத அமேரிக்க டாலர் பலவீனமும், சீனா மற்றும் இந்தியாவில் அதிகரித்துவரும் எரிபொருள் தேவை ஆகியவற்றினால் எழுந்த ஆருடத்தின் விளைவாக இந்த விலை உயர்வு எனக் கூறப்பட்டது.

நலிவடையும் அமேரிக்க பொருளாதாரத்தைச் சீரமைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மே 6 ஆம் தேதி எரிபொருள் விலையை 120 டாலராக உயர்த்திவிட்டது.

சீனாவின் தேவை அதிகரிப்புக்கிடையில் அமேரிக்காவின் எரிபொருள் துறையில் புதுக் கண்டுபிடிப்புகள் எதிர்பாராதபடி குறைந்துவிட்டதாலும் மே 21 ஆம் தேதி உலகச் சந்தையில் 133.82 டாலராக எரிபொருள் விலையை அதிகரித்துவிட்டது.

இவையனைத்துக்கும் முத்தாய்ப்பாக அமமைந்தத இந்த ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம்.

‘ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிடாவிட்டால் ஈரானைத் தாக்குவேம்’ என்று இஸ்ரேல் வெறும் மிரட்டலை விடுத்த உடனேயே 133 டாலராக இருந்த எரிபொருள் விலை 139 டாலராக உயர்ந்துவிட்டது.

இதுவரை எரிபொருள் உயர்வுக்கான காரணங்களைத் தெரிந்துக் கொண்ட நீங்கள் இவற்றுக்கான காரண காரியங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் பெரும்பாலும் இராணுவ நடவடிக்கைகளும் போர் நடவடிக்கைகளுமே எரிபொருள் விலை உயர்வுக்கு அடிப்படையாக இருப்பதை உணர்வீர்கள்.

எண்ணெய் விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டுமானால் பாரதிதாசன் பாடியது போல புதிய உலகம் படைக்கப்பட வேண்டும்.
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியிருக்கிறார். அது போல போர் இல்லாத புதிய உலகத்தை மக்கள் படைத்தால் தான் எண்ணெய் விலையைத் தடுக்க முடியும்.
தகவல்: மலேசிய நண்பன்

மனிதன் இயற்கையை வென்றுவிட்டானா ?

இயற்கையின் ஆளுமை என்பது அசாதாரனமானது. இயற்கையின் வலிமையை மிக அழகாக சில வரிகளில் மதன் அவர்கள் தன்னுடைய கேள்வி பதில் பகுதியில் சொல்லி இருக்கிறார்.

கேள்வி : மனிதன் இயற்கையை வென்றுவிட்டானா ?

மதன் பதில் : அண்ட்டார்டிகா லேசாக சோம்பல் முறித்துக் கொண்டு சற்றே உருக ஆரம்பித்தால், அமெரிக்காவின் அத்தனை அடுக்குமாடிக் கட்டடங்களும் தண்ணீருக்கு அடியில் போய்விடும். பூமி கொஞ்சம் இருமினால் பூகம்பம் ஏற்பட்டு அதோகதிதான்! சூரியன் சற்றே கோபப்பட்டால், சில டிகிரிகள் வெப்பம் அதிகமாகி மனித இனமே காலி! கிரிகெட் அம்பயர் ‘சிக்ஸர்' என்று காட்டுவதைப் போல, கடல் தன் அலைக் கரங்களை உயர்த்தினால், சுனாமி! இயற்கையை மனிதனை வெல்ல, இது என்ன ‘டேவிட் - கோலியத்' மோதலா?! மொத்த மனித இனமே இயற்கைக்கு முன் ஒரு துரும்பு!

நன்றி : ஆனந்த விகடன்

தண்ணீர்... தண்ணீர்....

இவை அனைத்தும் சில வருடங்களுக்கு முன் நான் சேகரித்து வைத்த படங்கள்.... இதோ உங்கள் பார்வைக்கு...












இரண்டு வரி சொல்லிட்டு போங்க...




நதிகள் ஆயிரம், நீருக்கு பஞ்சம்...


நீர். இது உலகு வாழ் உயிரினங்களுக்கு அத்தியாவசியப் பொருள். நீரின்றி உயிரினங்கள் வாழ முடியாது. நீர் இல்லாத உலகத்தை நினைத்துப் பாருங்கள், வறண்ட பூமி உயிரில்லாமல் சுருண்டு போய் கிடக்கும்.
மனித நாகரிகம் தொடங்க காரணமாக இருந்தது நீர்தான். இந்திய, சீன மற்றும் எகிப்திய நாகரிகமென அனைத்தும் நீர் நிலை பகுதிகளில் தான் தொடங்கியது என்பது அனைவரும் அறிந்த வரலாற்று உண்மை. மனித நாகரிகம் வளர்ச்சியடைய தொடங்கிய காலத்தில் நீர், நிலம், காற்று என எல்லாவற்றயும் இலவசமாக அனுபவித்து வந்தான் மனிதன். காலப்போக்கில் மனிதனின் மனதை சுயநலம் ஆட்சி செய்ய ஆரம்பித்தது. ஆசைகளும் தேவைகளும் அதிகரித்தது.
இதன் விளைவு என்ன? இலவசமாக உற்பத்தியாகும் நீரை, 500ml குடி நீர் பாட்டில் 1 ரிங்கிட் என காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு வந்து விட்டான் மனிதன். அப்படி என்றால் இன்னும் 50 ஆண்டுகளில் இந்த நிலை எப்படி இருக்கும் பூமித்தாய் கொடுக்கும் நீரை பங்கு போட்டு லாபம் பார்க்கும் நிலமையை நம்மால் மாற்ற முடியுமா? செத்துப் போய் கிடக்கும் ஜீவ நதிகளுக்கு நம்மால் உயிர் கொடுக்க முடியுமா?
நான் ஆரம்ப கல்வி பயிலும் சமயத்தில், இயற்கை பாதுகாப்பு தொடர்பான பல கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். ஒரு முறை நீர் தூய்மைக் கேட்டை பற்றிய உரையை முடித்தவரிடம், ஒரு கேள்வி கேட்டேன். “எதற்காக நீரை சிக்கனமாக உபயோகிக்க சொல்கிறீர்கள்? நம் நாட்டிலும் இது போல் எற்படுமா?” என அவர் காட்டிய சில படங்களை குறித்துக் கேட்டேன். வறட்ச்சியடைந்த இடத்தின் மக்களின் வாழ்வை காட்டுவதாக இருந்தது அப்படங்கள்.
சில நாட்டில் மட்டுமே மக்கள் குறைந்த விலையில், சுத்தமான நீரை பயன்படுத்தும் வாய்ப்பைப் பேற்றிருக்கிறார்கள். நமக்கும் இங்கு நீர் சுலபமாக கிடைக்கிறது. அதை பயனுள்ள வழியில் உபயோகித்தால் அனைவருக்கும் நல்லது என்றார் அவர்.
நமக்கு தேவையான அளவிற்கு நீரை, மழை கொடுக்கிறது. இருந்தும் ஒரு சில ஆண்டுகளில் நீரின் விலை ஏற்றம் காண்கிறது. காரணம் கேட்டால், மக்களிடம் நீரை சிக்கனமாக உபயோகிக்க கற்றுத் தருவதற்கு இதைவிட சிறந்த வழியில்லை என பூசி மழுப்புகிறார்கள். இது கடுமையான முறையாக இருந்தாலும் ஒரு விதத்தில் நல்லதுதானே.
ஏன் மனிதன் வீடுகளில் மழை நிரை சேமிக்க சோம்பல் கொள்கிறான். குடிக்க, குளிக்க மற்றும் சமைப்பதை தவிர்த்து இதற தேவைகளுக்கு மழை நீரை பயன்படுத்தலாமே. செலவும் குறையும் தேவையும் பூர்த்தியடையும்.
தொடரும்....
அன்புடன்,
விக்னேஷ்

இது ஒரு வழி...........

வணக்கம்,

ஒரு மரத்தை வெட்டினால்தான் 3,000 தாள்கள் உற்பத்தி செய்ய முடியுமாம். பேப்பர் பில் அனுப்புவதற்காக மாதந்தோறும் ஏராளாமான மரங்கள் வெட்டவேண்டியுள்ளது.

அதனால்...........









மேலும் விவ்ரங்களுக்கு,

http://www.gogreenindia.com/


He who plants a tree…plants hope

* Save paper…beginning with your office.
* Encourage purchase of recycled paper.
* Print on reusable sheets.
* Print multiple pages on single sheets of paper.
* Set defaults to print double-sided and print on both sides.
* Print only the pages required.
* Preview documents before printing.
* Increase margin width of the documents.
* Change the default font size from 12 point to 10 which would shrink your document by about 10%.

By using e-mail statements we can save an enormous amount of paper.

By conserving energy, we can contribute towards less demand for natural resources.

By helping plant more trees and preventing the cutting of the existing ones, contribute towards the making of a healthy planet, at no extra cost.



நன்றி........



புவி வெப்பமயமாகிறது: எட்டு ஆண்டுகளில் அனைவரும் மாற வேண்டும்: ஐ.நா. எச்சரிக்கை!!!

புவி வெப்பமயமாகுதலை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் தடுத்து நிறுத்த வேண்டும். எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை வெளிப்படுத்தும், பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருள் பயன்பாட்டில் இருந்து அனைத்து நாடுகளும் மாறியாக வேண்டும் என்று ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது.




பூமி உறைந்து போகாமல் இருக்க, ஓரளவுக்கு வெப்பம் தேவை. இந்த வெப்பத்தை கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் ஏற்படுத்துகின்றன. இவை பூமியின் மேற்பரப்பில் இயற்கையாக உருவாகும் தன்மை கொண்டவை. இவை போதிய அளவு வெப்பத்தை உருவாக்கி, பாதுகாப்பு கவசம் போல, பூமி உறைந்து போகாமல் பாதுகாக்கின்றன. ஆனால், நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற, பூமியிலிருந்து எடுக்கப்படும் படிம எரிபொருள்களை பயன்படுத்துவதால், கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களின் அளவு அதிகரித்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பூமியை மிகவும் வெப்பமாக்கின்றன. இயற்கைக்கு எதிராக நடக்கும் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெயில் இருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் பயன்பாடு உலகளவில் மிகவும் உச்சத்தில் இருக்கிறது. இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புவி வெப்பமடைந்து வருகிறது; பனி மலைகள் வேகமாக உருகுகின்றன; கடல் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. வெப்பம் அதிகரிப்பதால் வறட்சியும் மிரட்டுகிறது.

இயற்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் பல நாடுகளுக்கு ஆபத்து ஏற்படும். இதை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 24 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் அமைவதற்கு முன்பு, பூமி வெப்பம் கட்டுக்குள் இருந்தது. பூமி தாங்கக் கூடிய அளவிலிருந்து 2 முதல் 2.4 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பம் அதிகரித்தால் ஆபத்து இல்லை. அதற்கு மேல் அதிகரித்தால் ஆபத்து தான்.அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் வாயுக்களைக் கட்டுப்படுத்த, பூமியிலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி மற்றும் எண்ணெய் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். மாற்று எரிபொருளைப் பயன்படுத்த உலக நாடுகள் தயாராக வேண்டும்.

நீர் மின் நிலையங்கள், அணுசக்தி, சூரிய சக்தி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தயாரிப்பதை அதிகரிக்க வேண்டும். குறைந்த எரிபொருளில் ஓடும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனித்தனியாக வாகனங்களில் செல்வதை தவிர்த்து ரயில்கள் மற்றும் பஸ்கள் போன்ற வாகனங்களில் செல்ல வேண்டும். பயிர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். பசுமையை அதிகரித்து, காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டும். நெல் விளைச்சலில் புதிய யுக்திகளை பயன்படுத்த வேண்டும். கால்நடைகள் வளர்ப்பு மற்றும் எருவை பயன்படுத்தும் முறையை மேம்படுத்த வேண்டும். இதனால் மீத்தேன் வாயு வெளிப்படுவது குறையும். சிறந்த மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றை சரியான முறையில் பொருத்த வேண்டும். குளிர்படுத்தவும், வெப்பப்படுத்தவும் சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு பல விஷயங்களை ஐ.நா., வலியுறுத்தியுள்ளது. இவற்றை பின்பற்றுவதாக இந்தியா, சீனா உள்ளிட்ட நுõற்றுக்கணக்கான நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. தங்களின் வாழ்க்கை முறையையும், பொருட்கள் பயன்பாட்டில் மாறுதலையும் ஏற்படுத்தி கொள்வதாக வளர்ந்த நாடுகள் தெரிவித்துள்ளன. உலக மக்கள் தொகையில், 20 சதவீதம் பேரே வளர்ந்த நாடுகளில் உள்ளனர். ஆனால், உலகளவில் 50 சதவீத அளவுக்கு, சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் வாயுக்களை அந்த நாடுகள் தான் வெளிப்படுத்துகின்றன. அந்த நாடுகளில் மாற்றம் கொண்டு வந்ததால் தான் புவி வெப்பமடைவதை தடுக்க முடியும். அதே போல் இந்தியாவிலும் இந்த மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நன்றி தினமலர்.

Posted by பிருந்தன்

நன்றி பிருந்தன்.

இப்படி ஒரு வலைப் பூ ஆரம்பித்து பத்திரிக்கையில் வந்த இந்த விஷயத்தை பதிய வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் முந்திக் கொண்டீர்கள். உங்கள் பதிவை அப்படியே இங்கு உபயோகிக்கிறேன். அனுமதி மறுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்.